அறிமுக ஆலாபனை
அன்பினியோரே ! இது என் ஆன்மாவின் குரல். ஆன்மீக பயணத்தில் பாதையில் வரும் மைல் கற்களில் அமர்ந்து படித்தவற்றை சுவாசிக்கும் பொழுது. நான் அறிஞனுமல்ல , ஞானியுமல்ல. அன்றாட வாழ்க்கை எனும் சுழலுக்குள் சுழன்று கொண்டே அதன் சுழற்சியின் போக்கை வியப்புடன் நோக்குபவன். இந்தப் பகுதியில் என் ஆன்மாவின் குரலைச் சற்று உரக்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் படித்துச் சுவைத்தவைகளுக்கு கொஞ்சம் வர்ணம் பூசி உங்களுடன் காட்சிப்படுத்துகிறேன். தட்டிக் கொடுக்கா விட்டாலும் திட்ட மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்களோடு பேசுகிறேன். அன்பன் சக்தி சக்திதாசன்